திருக்குறள்

1210.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.

திருக்குறள் 1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.

பொருள்:

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

மு.வரததாசனார் உரை:

திங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

சாலமன் பாப்பையா உரை:

திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.